Tuesday, March 6, 2007

வன விலங்குகள்

சிங்கம்




சிங்கம் காட்டின் ராஜா என்று அழைக்கப்படும். இதன் கர்ஜனை காட்டையே அலற செய்யும்.






புலி
நமது இந்திய நாட்டின் தேசிய விலங்கு புலி ஆகும். இதற்கு பார்வை கூர்மை அதிகம். மிக ஆபத்தான விலங்கு.





யானை


யானை மிக மிக குன்டாக இருக்கும். யானைக்கு நீளமான துதிக்கை இருக்கும். யானைக்கு கூர்மையான் இரண்டு தந்தங்கள் இருக்கும். குழந்தைகளுக்கு பிடித்தமான விலங்கு யானை.



கங்காரு

இந்த விலங்கு ஆஸ்திரேலியா நாட்டில் அதிகமாக வசிக்கிற்து. இது தம் குழந்தையை தன் வயிற்றிலே வைத்து இருக்கும். இது ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்துக்கு செல்ல குதித்து குதித்தே செல்லும்.

ஒட்டக சிவிங்கி


ஒட்டகசிவிங்கி பார்ப்பற்க்கு மிக அழகாக இருக்கும். அதற்கு மிக நீண்ட கழுத்து இருக்கும். தாவரங்களை மட்டுமே சாப்பிடும். மிக அமைதியான விலங்கு.






ஒட்டகம்

இந்த வில்ங்கு அதிகமாக பாலைவனத்திலே காணப்படும். இதற்கு மிக நீண்ட கால்கள் இருக்கும். தன் உடம்பிலே தண்ணியை தேக்கி வைத்துக் கொள்ளும், ஆதலால் நிறைய நாட்கள் தண்ணீர் இல்லாமலே இருக்கும்.

நரி

காட்டில் வாழும் விலங்குகளில் மிக அறிவுக்கூர்மையான விலங்கு நரி. தன்னுடைய புத்தியால் உணவுகளை வேட்டையாடும். நரி இரவு நேரங்களில் சத்தமாக ஊளையிடும்.


வரிக்குதிரை

குதிரை போன்று உருவில் இருந்தாலும், இதன் உடம்பில் வெள்ளை, கருப்பில் நிற்த்தில் வரி வரியாக இருக்கும். பார்க்கவே அழகாக இருக்கும். இது பிறந்த சில மணிகளிலே நன்றாக ஓடும் திற்மை கொண்டது.

முதலை
அதிகமான நேரம் தண்ணீரிலேயே இருக்கும். மிக மிக கூர்மையான பற்களை கொண்டது. தண்ணீரில் இருக்கும் போது மிக பெரிய மிருகத்தை கூட கொன்று விடும். மிக பலம் கொண்டது.



Friday, March 2, 2007

குழ்ந்தையின் ஏக்கம்


குழ்ந்தையின் ஏக்கம்

அம்மா…உண் வரவை நோக்கி நோக்கி என் கண்கள் பூத்து விட்டது
திரையில் கார்டூன் பார்த்து பார்த்து என் கண்கள் சலித்து விட்டது

வீடு சேர்ந்த நீ…என் சோர்ந்த கண்களுக்கு முத்தமிடுகிறாய்
நான் விழிக்கும் போது அந்த முத்தம் கூட கணவு என்றே தோன்றுகிறது

என் அருகில் நீ வேண்டும்…உன் பரிசம் வேண்டும்
உன் அனைப்பு வேண்டும்…உன் அன்பு வேண்டும்


நான் விழித்து இருக்கும் போது உன் முத்தம் வேண்டும்